கோயில்களின் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ள பரோடா துங்கர்பூர் நகரத்திலிருந்து 59 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இது வகாத் எனப்பட்ட ராஜ்ஜியத்தின் தலைநகராக திகழ்ந்திருக்கிறது.
இங்கு சைவம் மற்றும் ஜைனம் இரண்டும் பின்பற்றப்பட்டிருக்கின்றன. இக்கிராமத்தின் பிரதான குளத்தின் அருகில் ஒரு புராதனமான சிவன் கோயிலை பயணிகள் தரிசிக்கலாம்.
வெண்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர் 1349வது சம்வாத் பஞ்சாங்க வருடத்திய குறிப்புடன் கூடிய கல்வெட்டு ஒன்றையும் இங்குள்ள குண்டலி எனும் அமைப்பில் காணலாம்.
இந்த கிராமத்தில் ஜைன தீர்த்தங்கரர் பர்ஷ்வநாதருக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு புராதன ஜைன கோயிலும் உள்ளது. இந்த கோயில் பட்டாரக் தேவேந்திர சூரி என்பவரால் 1904வது சம்வாத் பஞ்சாங்க வருடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.