தேவ் சொம்நாத் கோயில் துங்கர்பூர் நகரத்திலிருந்து 64 கி.மீ தூரத்தில் தேவ் காவ்ன் எனும் இடத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கோயில் சோம் ஆற்றின் கரையிலேயே உள்ளது.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி இந்தக்கோயில் 12ம் நூற்றாண்டில் விக்ரம் சம்வாத் மன்னரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. வெள்ளைக்கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இக்கோயில் அற்புதமான பிரகாசத்துடன் வீற்றுள்ளது. மேலும், கோயிலின் சுவரில் பல கல்வெட்டுக் குறிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளன.