துங்கர்பூர் பிரதேசத்தின் கலை மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் பற்றி முழுதாக அறிந்துகொள்ள பயணிகள் இந்த ராஜமாதா தேவேந்திர கன்வர் கவர்ன்மெண்ட் மியூசியத்திற்கு விஜயம் செய்வது அவசியமாகும்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள மூன்று காட்சிக்கூடங்களில் பலவிதமான தெய்வங்களின் உலோகச்சிலைகள், குறு ஓவியங்கள், கல்வெட்டுக்குறிப்புகள் மற்றும் நாணயங்கள் போன்ற 6ம் நூற்றாண்டு வரையிலான அரும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
முதல் காட்சிக்கூடத்தில் குப்தர் காலத்திய வரலாற்றுகால சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை கலியாகோட், அம்ஜார மற்றும் பரோடா போன்ற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை தவிர தாந்திரிக கணேஷ், மான் தோல் உடுத்திய பிரம்மி, வீணையேந்திய சிவபெருமான், பத்மிதி, பத்மபாணி யக்ஷா, கருட வாகனத்தில் வைஷ்ணவி போன்ற தெய்வச்சிலைகள் பயணிகளை பெரிதும் கவர்கின்றன.
இரண்டாவது காட்சிக்கூடத்தில் புகழ் பெற்ற குதுப் மினார் கோபுரத்தின் மாதிரி வடிவம் ஒன்றும், தபால் தலைகளால் உருவாக்கப்பட்டுள்ள விஜய ஸ்தம்பம் ஒன்றும் குறிப்பிடத்தக்கவை. மூன்றாவது காட்சிக்கூடத்தில் கல்வெட்டுக்குறிப்புகள் மற்றும் சுடுமண் சிற்பங்கள், மைவண்ண ஓவியங்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.