மஹரவால் புண்ராஜ் மன்னரால் 1623ம் ஆண்டு இந்த ஸ்ரீநாத்ஜி கோயில் கட்டப்பட்டுள்ளது. கோவர்த்தன் நாத்ஜி மற்றும் ராதிகாஜி போன்ற சிலைகள் இக்கோயிலின் சிறப்பம்சங்களாகும்.
இங்குள்ள பிரதானக்கோயிலில் பயணிகள் ஒரு காட்சி மாடத்தையும் காணலாம். மேலும் இந்த வளாகத்திலேயே இடம் பெற்றுள்ள பல சிறு கோயில்களையும் பயணிகள் பார்க்கலாம்.
இவற்றில் 16 கோயில்கள் மேற்குத்திசை நோக்கியும், மற்றொரு 16 கோயில்கள் கிழக்குத்திசை நோக்கியும், இதர 4 கோயில்கள் வடதிசை நோக்கியும் அமைக்கப்பட்டிருப்பது நுணுக்கமான அம்சமாகும். இந்த சிறு சன்னதிகள் அனைத்தும் ஷீ பங்கே பிகாரிஜி மற்றும் ஸ்ரீ ராமச்சந்திராஜி ஆகியோருக்காக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோயிலின் பிரதான அம்சமாக மூன்று அடுக்குகளைக்கொண்ட ‘கூத் மண்டப்’ எனும் கூடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது இங்குள்ள மூன்று கோயிலுகளுக்கு பொதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான மண்டபக்கூடம் 64 நிலைக்கால்கள் மற்றும் 12 தூண்களைக் கொண்டுள்ளது.