துவாரகா நகரத்திலுள்ள இந்த பல்கா தீர்த்தம் ஒரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். சோம்நாத் பகுதியின் வடக்கே இந்த பல்கா தீர்த்தம் எனும் கோயில் ஸ்தலம் உள்ளது.
இந்த ஸ்தலத்தில் ஷீகிருஷ்ணர் ஒரு வேடுவனின் அம்பால் காலில் குத்தப்பட்டு இறந்ததோடு கிருஷ்ண அவதாரம் முடிவுற்றதாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் ஸ்தலத்தில் கிருஷ்ணரின் நினைவாக ஒரு துளசி மரம் வீற்றிருக்கிறது.
பல்கா தீர்த்தத்திற்கு அருகிலேயே தெஹோத்சார்க் தீர்த்தம் எனும் மற்றொரு கோயிலும் அமைந்துள்ளது. இது கிருஷ்ணர் தகனம் செய்யப்பட்ட ஸ்தலமாக கூறப்படுகிறது. அம்பால் குத்தப்பட்டு கிருஷ்ணர் இறந்ததை குறிக்கும் சிலை ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
சோம்நாத கோயில் ஸ்தலத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் பல்தேவ் குஃபா எனும் குகைக்கோயில் காணப்படுகிறது. கிருஷ்ணரின் மரணத்தை அடுத்து அவரது சகோதரரான பலராமர் பாம்பு ரூபத்தில் இந்த குகைக்குள் சென்று மறைந்துவிட்டதாக ஐதீகக்கதைகள் சொல்லப்படுகின்றன. பலராமர் நாகராஜனின் அவதாரம் என்பது இந்த கதையோடு தொடர்புடைய மற்றொரு தகவல்.