பர்தா மலைகளின் அடிவாரத்தில் இந்த கும்லி எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இது 7ம் நூற்றாண்டில் ஜெத்வா சால் குமார் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஜெத்வா வம்சத்தாரின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது.
இங்கு குஜராத் மாநிலத்தின் சில அழகிய கோயிகள் அமைந்துள்ளன. இவற்றில் சோலங்கி வம்சத்தாரின் நவ்லோகா கோயில் பிரசித்தமாக விளங்குகிறது. இது குஜராத் மாநிலத்திலேயே பழமையான சூரியக்கோயிலாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
விகாய் வாவ் எனும் படிக்கிணறு அமைப்பும் இங்கு உள்ளது. தற்போது இந்த வரலாற்று கிராமத்தை புதுப்பித்து பாதுகாக்கும் முயற்சிகள் குஜராத் மாநில அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.