துவாரகா நகரத்தை நோக்கி பயணிக்கும்போது அதன் நுழைவாயிற்பகுதியிலேயே இந்த இஸ்க்கான் கோயிலை பயணிகள் பார்க்கலாம். கற்களால் கட்டப்பட்டுள்ள இது தேவி பவன் சாலையில் அமைந்துள்ளது.
இஸ்க்கான் எனப்படும் சர்வதேச கிருஷ்ண் பக்தி அமைப்பினால் நடத்தப்படும் இந்த கோயிலின் சந்நிதானத்தில் கிருஷ்ணர் மற்றும் ராதை சிலைகளை தரிசிக்கலாம். இந்த கோயிலின் மேல் தளத்திலிருந்து துவாரகதீஷ் கோயிலையும் பார்த்து ரசிக்க முடிகிறது.