மியூசியம் ஆஃப் ஷார்தாபீட மடம் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கராச்சாரியாச்சாரால் தோற்றுவிக்கப்பட்ட நான்காவது மடமாகும். துவாரகா பீடம் அல்லது காளிகா மடம் என்று அழைக்கப்படும் இந்த மடம் துவாரகா கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது.
இதன் சுவர்களில் சங்கராச்சாரியாரின் வாழ்க்கையை விவரிக்கும் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இதன் உட்புற மாடக்கூரைகளில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இதே ஸ்தலத்திலேயே ஷாரதா தேவி மற்றும் சந்திரமௌலீஸ்வரர் கோயில்கள் போன்றவையும் அமைந்துள்ளன. ஒரு கல்வி அறக்கட்டளை மையம், கலைக்கல்லூரி மற்றும் சம்ஸ்கிருத பயிற்சி கல்லூரி ஆகியவும் இந்த மடத்தின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.