மாவ்ப்ளாங் எனும் இடம் இங்குள்ள புனிதமான காடுகள் மற்றும் தோப்புகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இவை காலங்காலமாக இருந்து வருகின்றன.
காசி இன மக்கள் இந்த காடுகளை புனிதமான இயற்கை சின்னங்களாக கருது பாதுகாத்து வருகின்றனர். மாவ்ப்ளாங் பகுதியில் காசி மலைகளின் மீது இந்த காடுகள் அதிகம் காணப்படுகின்றன. தூய்மையான இயற்கை அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் ஒரு முறை விஜயம் செய்ய வேண்டிய இடம் இது.
ஷில்லாங் நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த மாவ்ப்ளாங் கிராமம் அமைந்திருக்கிறது. ‘மாவ் பிளாங்’ என்பதற்கு ‘பசும் பாறைகள்’ என்பது பொருள். இந்த பகுதியில் பழமையான ஒற்றைப்பாறை நிர்மாணங்கள் காணப்படுகின்றன.
எனவே இந்த பெயர் வந்துள்ளது. 1890ம் ஆண்டுகளில் வேல்ஸ் மிஷனரியின் ஒரு தேவாலயம் மற்றும் மருத்துவ முகாம்கள் போன்றவை இப்பகுதியில் இயங்கி வந்துள்ளன.
காசி இன மக்கள் இந்த காடுகளை புனிதமாக கருதுவதால் இவற்றில் மரங்களை வெட்டுவதையோ சுள்ளி பொறுக்குவதையோ, பூக்களை பறிப்பதையோ கூட தடை செய்துள்ளனர். இந்த காட்டிலிருந்து எதையேனும் திருடிக்கொண்டு வந்தால் கெட்ட ஆவிகள் மூலம் அவர்களுக்கு தீங்கு விளையும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
பல்வேறு மரவடிவங்கள், படிமங்கள், ஆர்க்கிட் செடிகள் மற்றும் பூச்சி வகைகளை இந்த காடுகளில் பார்க்கலாம். இவற்றை சுற்றிலும் பரந்த புல்வெளிப்பிரதேசமும் காணப்படுகிறது. இந்த புல்வெளிகளின் பின்னணியில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணையில்லை.