தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் பண்ணாரி ஆகும். பாரம்பரியமான இயற்கை அழகையுடைய இந்த கிராமம் சத்தியமங்கலம் நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த கிராமத்தை தனது தலைமையகமாக கொண்டு ஒரு சிறப்பு காவல் படை இயங்கி வருகிறது. இந்த கிராமம் இந்து பெண் கடவுளான பண்ணாரி அம்மனின் கோவிலுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
மாநிலத்தில் பிற பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வார்கள். குண்டம் என்ற பெயரில் இங்கு நடக்கும் திருவிழா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக அங்கம் வகிக்கிறது.
இந்த கொண்டாட்டங்கள் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் (மார்ச் - ஏப்ரல்) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். காலை 5:30 மணிக்கு திறக்கப்படும் இந்த கோவில் இரவு 9:00 மணிவரை பக்தர்களுக்காக திறந்திருக்கும்.