ஈரோடு நகரத்தின் மிகவும் புனிதமான மற்றும் சிறப்பான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பெரிய வரலாற்றுப் பின்னணியை கொண்ட கோவிலாகும்.
கஸ்தூரியை முக்கிய கடவுளாக கொண்டிருக்கும் இந்த கோவிலில் தனித்தன்மையான பல விஷயங்கள் உள்ளன. பிற ரங்கநாத பெருமாள் கோவில்களிலிருந்து இவ்விடத்தின் கடவுள் மிகவும் மாறுபட்டவராவார்.
இயற்கையாகவே பார்வையாளர்களை கவரும் தன்மையையுடைய துவார பாலகர்கள், இந்த கோவிலைப் பற்றிய கதைகளுடன் மிகவும் தொடர்புடையவர்களாவர். புராண கதைகளின் படி இந்த துவார பாலகர்கள் ரங்கநாத பெருமாளை வணங்கும் தேவர்களாவர்.
கமலவல்லி தாயார் இங்கு வழிபடப்படும் பெண் தெய்வமாவார். தொடர்ச்சியாகவே பெரும்பாலான பக்தர்கள் இங்கு தினம் தினம் வந்து சென்றாலும், மார்ச் மாதங்களில் நடைபெறும் திருவிழாவின் போது மிகவும் அதிகமான அளவில் பக்தர்கள் இங்கு வந்து செல்வார்கள்.