ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து சுமார் இரண்டே கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புண்ணியத்தலம் மகிமாலீஸ்வரர் கோவிலாகும். சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் இந்தத் தலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
மலிவாரர் கடவுளுக்காக இந்த இடம் வழங்கப்பட்டிருப்பதால் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. சிவபெருமான் முக்கிய கடவுளாக இருந்தாலும், மரகதாம்பிகை என்றழைக்கப்படும் மா சக்தி கோவில் ஒன்றும் இங்கு உள்ளது.
மேலும் இந்த கோவிலில் கணேச பெருமானுக்கும், பிரம்ம தேவருக்கும் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலின் புனிதத்தன்மை ஆயிரக்கணக்கான பக்தர்களை கவர்ந்திழுக்கும் மிகப்பெரிய அம்சமாக உள்ளது.
உள்ளூர்வாசிகள் இந்த கோவிலைப்பற்றி நிறைய கதைகளை பகிர்ந்து கொள்கின்றனர். இங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானின் மீது பெரும் நம்பிக்கையை உடைய உள்ளூர் மக்கள், அவர்கள் சந்திக்கும் தடைகளை தாண்டி வெற்றி பெற வல்லமை மிக்க சிவபெருமான் உதவுதாக நம்புகின்றனர்.