ஸ்ரீ வேலாயுத சுவாமி என்ற பெயரையுடைய திருமுருகக் கடவுளின் கோவிலான திண்டல் முருகன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தங்கத்தாலான தேர் ஒன்றும் உள்ளது.
பங்குனி உத்திரம் இங்கு கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் திண்டல் முருகனில் அருள் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பண்டிகைக்கு வந்து செல்வார்கள்.
இந்த கோவில் இந்தியாவின் முக்கிய வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. திண்டல் கற்பாறைகளின் மீது இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முழுமையான அமைதியை தங்கள் இதயப்பூர்வமாக உணருவார்கள்.
மேலும் இந்த கோவிலின் வட மேற்கு பகுதியில் தன்னாசி குகை என்ற இடமும் அமைந்துள்ளது. பயணிகள் எளிதில் அடைவதற்கு வசதியாக இந்த கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.