இந்த மக்பாரா அல்லது கல்லறை சுஜா-உத்-தெளலாவினால் அவரது அன்பு மனைவி பஹு பேகம் நினைவாக கட்டப்பட்டது. இந்த மக்பாரா முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
1816 ல் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கல்லறை தாஜ் மஹாலின் மகிமையை மீண்டும் நிலைநட்ட மேற்கொள்ளபட்ட ஒரு முயற்சி என வரலாறு தெரிவிக்கிறது. வெள்ளை பளிங்கு கற்கள் அதன் பிரகாசத்தை இன்றும் தக்கவைத்திருக்கிறது. நிலவொளியில் பார்க்கும் பொழுது அழியா கல்லறையின் பிரகாசம் மனதை மயக்குகிறது.
42 மீட்டர் உயரம் உள்ள இந்த கல்லறை பைசாபாத் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளின் வண்ணமயமானமற்றும் அழகிய காட்சிகளை காண நமக்கு உதவுகிறது. இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.