குப்டார் காட் என்பது ஒரு நீண்ட கல் படிகள் கொண்ட சரயு நதியின் படித்துறை ஆகும். இந்து மத நம்பிக்கையின் படி, ராமர் தனது ஆயுட் காலத்திற்கு பின் இந்த படித்துறையில் இறங்கி சரயு நதியில் ஜலசமாதி அடைந்து வைகுண்டத்தில் உள்ள விஷ்ணுவை அடைந்தார்.
எனவே இது இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும். புராண முக்கியத்துவத்தை தவிர, இந்த படித்துறையில் இருந்து நாம் காணும் சரயு நதியின் கண்ணுக்கினிய காட்சியானது பல்வேறு பண்டைய கோவில்களால் நிறைந்துள்ளது.