பைசாபாத் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய யாத்திரை தலமாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வந்து செல்கின்றனர். அவர்களின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யயும் வகையில் ரிஷபதேவ் ராஜ்காட் உதயன் 1989 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
பச்சைப்பசேல் எனப் பராமரிக்கப்பட்டு வரும் பூங்கா இந்த பகுதியின் முக்கியமான அம்சமாகும். இங்குள்ள பசுமையான புல்வெளிகள் மற்றும் பசுமையான தாவரங்கள் நிறைந்த காடுகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது.
இங்குள்ள 22 அடி உயரமுள்ள பத்மாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் உள்ள முதல் ஜெயின் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் சிலை அனைவரின் கவனத்தையும் கவர்கிறது.