கட்டடக் கலைக்கு பெயர் பெற்ற ராஜா நஹர் சிங் அரண்மனை, 18-ஆம் நூற்றாண்டில் ஜட் நஹர் சிங் அவர்களின் முன்னோர்களால் கட்டப்பட்டதாகும். இந்த அழகிய அரண்மனை 1850-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது.
தெற்கு டெல்லியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அரண்மனையை பல்லப்கர் கோட்டை அரண்மனை என்றும் அழைக்கின்றனர். ராஜா நஹர் சிங் என்பவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.
இந்த அரண்மனையில் அழகிய காட்சிக் கூடங்களையும் அரசவை கூடங்களையும் காணலாம். இங்கு காணப்படும் செதுக்கிய வளைவுகளும் அழகாக அலங்கரிக்கப்பட்ட அறைகளும் நம்மை வரலாற்று காலத்துக்குள் இழுத்துச் சென்று விடும்.
தற்போது இது ஹெரிடேஜ் சொத்தாக விளங்குகிறது. இதனை சுற்றி பல நகர மையங்களும் அமைந்துள்ளன. இந்த கம்பீரமான அரண்மனை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளது.