சூரஜ்குந்த் என்பது ஃபரிதாபாத்தில் உள்ள மற்றொரு புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த ஏரி குறியீட்டு முக்கியத்துவம் பெற்றதாகும். உதிக்கும் சூரியனை குறிப்பிடுவதாக விளங்குகிறது இந்த ஏரி.
பாறைகளை குடைந்து செய்யப்பட்ட படிகளால் சூழப்பட்டுள்ளது இந்த புகழ் பெற்ற சுற்றுலாத் தலம். தெற்கு டெல்லியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
இங்குள்ள சித்தாகுந்தில் உள்ள நீருக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. சூரஜ்குந்த் வளாகத்தில் அழகிய தோட்டம் ஒன்றும் உள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் 15-ஆம் தேதி வரை புகழ் பெற்ற சூரஜ்குந்த் சர்வதேச திருவிழா இங்கு நடைபெறும்.
கைத்திறத் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் செய்யப்பட கைத்தறி பொருட்களும் கலைப் பொருட்களும் இந்த மேளாவில் வைக்கப்படும். இது இந்தியாவின் கிராமிய நிறத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்.
திருவிழாவின் போது நாட்டுப்புற நடனங்கள், கச்சேரிகள், கழைக்கூத்துகள், மேஜிக் ஷோ போன்றவைகள் நடைபெறும். இந்த மேளாவை கண்டுகளிக்க உலகின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. இந்திய உணவு வகைகளும் இந்த மேளாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.