குருத்வாரா டிலா பாபா ஃபரித் ஒரு முக்கியமான ஆன்மீகத் ஸ்தலமாகும். இது கிலா முபாரக்கின் அருகே அமைந்துள்ளது. இங்கு பக்பட்டான் செல்வதற்கு முன்னர் சூஃபி ஞானியான பாபா ஃபரித் இங்கு சுமார் 40 நாட்கள் தவம் புரிந்ததாக நம்பப்படுகிறது.
தனது கைகளை சுத்தம் செய்ய பாபா ஃபரித் பயன்படுத்திய ஒரு மரத் துண்டு இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த குருத்வாராவில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது. மேலும் இங்கு வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.