குருத்வாரா கோதாவரிஸர், கோடக்புரா-பதிந்தா சாலையில் உள்ள தில்வான் காலன் கிராமத்தில் அமைந்துள்ளது. இது சீக்கியர்களுக்கு மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக விளங்குகின்றது.
10-வது சீக்கிய குருவான ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜி டல்வாண்டி சாபோவிற்கு செல்லும் வழியின் இங்கு தங்கிச் சென்றதாக நம்பப்படுகின்றது. இங்கு வருகை புரிந்த குரு இந்த கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்திற்கு தனது ஆடைகளை வழங்கிச் சென்றதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
அந்த அடைகளை அந்த குடும்ப உறுப்பினர்கள் இன்றும் பாதுகாத்து வருவதாக கருதப்படுகின்றது. தில்வான் காலன் கிராமத்தில் கோதாவரி சார் என அழைக்கப்படும் ஒரு புனித குளம் ஒன்று உள்ளது. அங்கு குரு கோபிந்த் சிங் ஜி புனித நீராடியதாக நம்பப்படுகின்றது.