ஹுமாயூன் பாதுஷாவால் 1526ல் துவங்கி 1536ல் கட்டிமுடிக்கப்பட்ட கட்டப்பட்ட ஹுமாயூன் மசூதி இங்கு உள்ளது. தன் தந்தை பாபரைப் போல் அல்லாது கொஞ்சம் பலவீனமான மன்னராக விளங்கிய ஹ்யூமாயூன் செர்ஷா சூரியால் தோற்கடிக்கப்பட்டு ஃபெரோஸ் ஷா கட்டிய ஒரு கோட்டையில் ஓய்வெடுத்தார்.
அப்போது இங்கு தன் தொழுகைகளை ஹ்யூமாயூன் நிகழ்த்தியதால் இம்மசூதி இங்கு கட்டப்பட்டது. லகெளரி செங்கல்களால் செய்யப்பட்ட பெரிய திரையைக் கொண்ட இம்மசூதி மேற்கு பக்கம் திசை காட்டும் விதத்தில் அதாவது புனிததளமான மெக்காவை நோக்கி இருக்குமாறு கட்டப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற இஸ்லாமிய தளமான இதற்கு ஏராளமான இஸ்லாமியர்கள் வருகை தருகிறார்கள். ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் இங்கு தொழுகை செய்யுமளவிற்கு இது பெரிய மசூதி ஆகும்.