சந்த் நாம்தேவ் கோயில் எனப்படும் இந்த கோயில் பஸ்ஸி பத்தானா எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது ஃபதேஹ்கர் சாஹிப் ஸ்தலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. சந்த் நாம்தேவ் எனும் யோகியின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் இப்பகுதியில் ஒரு பிரசித்தமான ஆன்மீக வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
மஹாராஷ்டிராவை சேர்ந்த சந்த் மஹாதேவ் தனது யாத்திரை பயணங்களின்போது ஒரு முறை பஞ்சாப் பகுதிக்கும் வருகை தந்துள்ளார். துவக்கத்தில் இந்த கோயில் ஸ்வாமி நாம்தேவ் ஜி கா தேரா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நாம் காணும் இந்த கோயிலின் அமைப்பானது 1925ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
சீக்கியர்களின் புனித மறையான குரு கிரந்த் சாஹிப் நூலில் இந்த சந்த் நாம்தேவ் யோகியின் 61 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன என்பது வியக்கவைக்கும் ஒரு தகவலாகும். ஒவ்வொரு வருடமும் பசந்த் பஞ்சமி அன்று இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.