அக்பரின் பிரத்யேக மாளிகையின் முன்பு அமைந்துள்ள அனூப் தலாவ் தனித்துவமிக்க மிகப்பெரிய தண்ணீர் தொட்டியாகும். காவாப்கா வளாகத்தின் முன் அமைந்துள்ள இத்தொட்டி அக்காலத்தின் சிறப்புடன் விளங்கிய ஒன்றாகும்.
இந்த செங்கல் கட்டிடம் அழகிய மேடைகளுடன், சிறப்பான கோணங்களுடன் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. நான்கு புறத்திலும் சிறிய வழித்தடங்களுடன் உள்ளது. பழங்காலங்களில் எந்த நேரத்திலும் சுத்தமான நீர் இருக்கும் வண்ணம் பிரதான நீர்நிலையுடன் இணைக்கப்பட்டிருந்தது.
பழைய பதிவுகளின்படி சூரிய ஒளியில் மின்னும் வண்ணம் இத்தொட்டியின் உள்ளே தங்க மற்றும் வெள்ளி நாணயங்கல் போடப்பட்டிருக்கிறது. பின்னர் ஜஹாங்கீர் அந்த நாணயங்களை தர்மமாக கொடுத்திருக்கிறார்.
தனது குறிப்பேடுகளில் ஒரு கோடியே மூன்று லட்சம் காசுகளை அதிலிருந்து எடுத்து தர்மமாக கொடுத்ததாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.