சட்லஜ் நதிக்கரையில் உள்ள ஃபெரோஸ்பூர் பஞ்சாபின் வரலாற்றுப் பெருமைமிக்க ஊர்களில் ஒன்றாகும். துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த ஃபெரோஸ் கான் துக்ளக்கால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் பட்டி இனக்குழுத் தலைவரான ஃபெரோஸ் கானின் பெயரை தாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். வரலாற்று கட்டிடங்கள் மட்டுமல்லாது மதம் சார்ந்த கட்டிடங்களும் இங்கு ஏராளமாக உண்டு.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
பல சுற்றுலாதளங்களைக் கொண்டுள்ள ஃபெரோஸ்பூரில் ஜெயின் மந்திர், பொதிமாலா, குருத்வாரா குருசார் ஆகிய இடங்கள் உள்ளன. ஆங்கிலேய-சீக்கிய போரின் போது பிரதான பங்கு வகித்த இந்த இடம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ளது.
ஏராளமான அருங்காட்சியகங்களும், நினைவுச்சின்னங்களும் உள்ளது. ஆங்கிலேய-சீக்கிய நினைவகம், சாராகிரி நினைவகம், தேசிய தியாகிகள் நினைவகம், பார்கி நினைவகம் ஆகியவை இங்கு உள்ளன.
அதுமட்டுமின்றி 66 கிமீ தொலைவில் ஹரி பறவைகள் சரணாலயம், 40கிமீ தொலைவில் பொதிமாலா, ஹனுமன் மந்திர் ஆகியவையும் இங்கு உள்ளது.
ஃபெரோஸ்பூரை எப்படி அடைவது?
131 கிமீ தொலைவில் உள்ள அம்ரிஸ்டர் விமானநிலையத்தில் இருந்து 2மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம். அதுமட்டுமின்றி சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் உண்டு.
பயணிக்க சிறந்த பருவம்
ஃபெரோஸ்பூர் பயணிக்க சிறந்த பருவமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் கருதப்படுகிறது.