கடக் அருகே உள்ள குக்கனூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய கிராமமே லாகுண்டி. இந்த இடம் சாளுக்ய காலத்தில் கட்டப்பட்டு தற்போது சிதைந்து கிடக்கும் கோயில்களுக்காக பெரிதும் அறியப்படுகிறது. எனினும் மல்லிகார்ஜுனா கோயில், சோமேஸ்வரர் ஆலயம், நீலகண்டேஸ்வரர் மற்றும் லக்ஷ்மி நாராயண கோயில் ஆகியவை இன்றும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.
லாகுண்டியிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக காசி விஸ்வநாத கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயில் சிவனுக்காகவும், சூரியனுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது.
லாகுண்டியில் உள்ள ஒவ்வொரு கோயிலும் ஹொய்சால மற்றும் சாளுக்ய காலத்து கட்டிடக்கலையின் உன்னத சாட்சியாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அதோடு 101 படிச் சுவர்களும், நேர்த்தியான கல்வெட்டுகளும் லாகுண்டியின் சரித்திரப் புகழுக்கு சிறப்பு சேர்ப்பன.
லாகுண்டி கடக் நகரிலிருந்து தென் கிழக்கு திசையில் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு கடக்கிலிருந்து எந்த நேரத்திலும் நீங்கள் சுலபமாக பேருந்து மூலமாக லாகுண்டியை அடையலாம். அதுமட்டுமல்லாமல் கடக் நகரிலிருந்து பயணிகள் ஆட்டோ மற்றும் வாடகை கார்களிலும் லாகுண்டிக்கு செல்லலாம்.