லக்ஷ்மேஸ்வரா என்ற விவசாய வாணிப நகரம் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தில் ஜைன மதத்தவர்களும், சிவ பக்தர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இங்கு தான் புகழ்பெற்ற கற்கோயிலான சோமேஸ்வரர் ஆலயமும் உள்ளது.அதோடு சன்னா பசாதி மற்றும் ஷங்கா பசாதி எனும் ஜைன கோயில்களும் இந்த நகரில்தான் இருக்கின்றன.
மேலும் ஜம்மா மஸ்ஜித், முக்கா பசவண்ணா ஆலயம், கோடியெல்லம்மா கோயில் மற்றும் சூரிய நாராயண கடவுளின் மிகப்பெரிய சிலை ஆகியவைக்காகவும் லக்ஷ்மேஸ்வரா நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த நகரம் நிறுவப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. அவற்றில் புரிகெரே, பொரிகெரே, புரிகாநகர், புலிகாநகர் மற்றும் புலிகெரே போன்ற பெயர்களும் அடங்கும்.
கலாச்சார மற்றும் இலக்கிய சிறப்பு வாய்ந்த இந்த நகருக்கு பயணிகள் வாழ் நாளில் கட்டாயம் ஒரு முறையாவது வர வேண்டும்.