கர்நாடக மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் முக்கிய அம்சமாக இந்த நார்குண்ட் கோட்டை புகழ் பெற்றுள்ளது. 1675ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்ட இரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும். மற்றொன்று ராம்துர்க் கோட்டையாகும்.
1691 -92 ம் ஆண்டுகளில் இது ஔரங்கசீப் மன்னரால் கைப்பற்றப்பட்ட போதிலும் மீண்டும் 1706 – 07 ம் ஆண்டில் ராமராவ் தாதாஜி பாவே’வால் மீட்கப்பட்டது. 1778ம் ஆண்டு மைசூர் மன்னர் ஹைதர் அலியால் தோற்கடிக்கப்பட்ட இந்த கோட்டை திப்பு சுல்தானால் 1784 ம் ஆண்டு முழு ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டது.
1857ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடந்த புரட்சியில் இந்தக்கோட்டை ஸ்தலம் முக்கிய பங்கு வகித்துள்ளது. பாபா சாஹேப் எனப்படும் பாஸ்கர ராவ் பாவே இப்புரட்சியில் பங்கெடுத்துள்ளார்.