கடக் வரும் பயணிகள் நேரம் இருந்தால் சோமேஸ்வரர் ஆலயத்துக்கும் செல்லலாம். இந்தக் கோயில் கடக் நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் கொட்டுமச்சாகி கிராமத்தில் அமைந்துள்ளது.
இதன் அருகாமையில் இருக்கக்கூடிய ஏரிக்கரையில் அமர்ந்துதான் மஹாகவி சாமரசா தன்னுடைய மிகச் சிறந்த காவியமான 'பிரபுலிங்கலீலை' யை படைத்தாதாக சொல்லப்படுகிறது.