இந்தியா பிளவுபட்ட போது, பாகிஸ்தானை சேர்ந்த சிந்தி மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க காந்திஜியின் வேண்டுகோளுக்கிணங்க கட்சின் மகாராஜாவான, மேன்மைமிகு மகாராவ் ஸ்ரீ விஜய்ரஜ்ஜி கேன்கர்ஜி ஜடேஜா மனதார தன் 15,000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
காந்திஜியின் வழிகாட்டலுடன் பாய் பிரதாப் டியால்தாஸ் என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த அகதிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் செயலில் ஈடுபட முன் வந்தார். இந்த மக்களுக்கு தன் சொந்த பூமியை போல, தாங்கள் வாழ்ந்த வானிலை மற்றும் பேசிய மொழியை பிரதிபலிக்கும் வகையில் இந்த இடம் உருவாக்கப்பட்டது.
சிந்து மறுகுடியேற்ற கழகம் ஒன்று உருவாக்கப்பட்டு காந்திதம் என்ற புது நகரியம் உருவானது. இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலாமாக (SEZ - ஸ்பெஷல் எகனாமிக் சோன்) கண்ட்லா என்ற இடம் உருவாக்கப்பட்டது.
இலவச வணிக மண்டலம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளால் கண்ட்லா மற்றும் காந்திதம் விரைவிலேயே முன்னேறத் தொடங்கியது. இங்குள்ள துறைமுகமும் ஒரு பெரிய ஈர்ப்பாக அமையும்.
இங்குள்ள பர்தேஷ்வர் கோவில், ஸ்ரீ சந்திர பிரபுஜி பகவானுக்காக அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். இது ஜெயின் சமுதாயத்தினருக்கான புனித ஸ்தலமாகும். காந்திதம்மில் உள்ள மற்ற சமயஞ்சார்ந்த இடமாக விளங்குகிறது அக்ஷர்தம் மற்றும் பூர்னேஷ்வர் கோவில்கள்.
கோடைக்காலத்தில் வெயில் கொளுத்துவதாலும் குளிர் காலத்தில் உறைந்து போகும் அளவிற்கு இருப்பதாலும் காந்திதம்மில் அனைத்து காலத்திலும் உச்ச அளவு வானிலை நிலவும்.