பத்ரேஷ்வரிலுள்ள கோவில்கள் தான் இந்தியாவிலுள்ள ஜெயின் கோவில்களிலேயே பழமையான கோவில்களாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஜெயின் துறவியான ஷ்ராவக் தேவச்சந்த்ரா என்பவர் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினார்.
இக்கோவில் வளாகத்தில் மூல பத்ரேஷ்வர் கருவறையை சுற்றி 53 ஜெயினலேஸ்கள் உள்ளன. இக்கோவில்கள் நிலநடுக்கம் மற்றும் இதர இயற்கை சீற்றத்தினால் பல முறை அழிந்திருந்தாலும், இவைகள் நல்ல முறையில் மீண்டும் புதுபிக்கபட்டுள்ளன