அக்ஷர்தம் கோவில் குஜராத்தில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். இது பக்தி மற்றும் கட்டமைப்பின் ஒரு அரிய கலவையாக உள்ளது.இங்கு சிற்பக் கலை சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் மூலவரான சுவாமிநாராயணனின் சிலை உள்ளது. காந்திநகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இந்த கோவில் மற்றும் நினைவுச் சின்னத்தின் அழகில் மெய்மறந்து விடுகின்றனர்.
"இந்த இடத்தில் கலை முடிவற்றது, கலாச்சாரம் எல்லைகள் அற்றது, மற்றும் மதிப்புகள் காலமற்றது" என அக்ஷர்தம் கோவிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.