பீதாபூர் கிராமத்தில் அமைந்துள்ள கைவினை கிராமம் காந்திநகரில் இருந்து சுமார் 7 கீ.மீ. தொலைவில் உள்ளது. பாந்தினி சேலைகளுக்காக மிகப் பிரபலமாக விளங்கும் இந்தக் கிராமம் சபர்மதி ஆற்றின் பின்புறத்தில் அமைந்துள்ளது.
அழகாய் செதுக்கப்பட்ட மர அச்சு தொகுதிகளைப் பயன்படுத்தி கைகளால் அச்சிடப்பட்ட பாந்தினி சேலைகள் இங்கிருந்து சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.