இன்ட்ரோடா பூங்கா பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட பகுதிகள் மான் பூங்கா, பறவை பூங்கா, மற்றும் பாம்பு பூங்காக்களாக செயல்படுகின்றன. மேலும் இந்தப் பூங்காவில் மிகப் பெரிய கடல்வாழ் பாலூட்டி இனங்களின் எழும்புக்கூடுகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு காட்டு விலங்குகளான ஊர்வன,நீலான், நீண்டவால் குரங்கு, மற்றும் மயில்கள் போன்றவை இந்த பூங்காவில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இந்த பூங்கா குஜராத் சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.