மகாத்மா மந்திர் குஜராத் அரசால், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக உருவாக்கபட்ட ஒரு மையம் ஆகும். இங்கு உள்ள வளாகத்தில் சுமார் 5000 பேர் பங்கேற்கக் கூடிய ஒரு கன்வென்ஸன் சென்டர் உள்ளது.
இங்கு மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் மற்றும் பல்வேறு இலக்கியங்கள் போன்றவை சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. இத்தகைய சேமிப்புகள் பாபுஜியைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு பொக்கிஷமாக விளங்குகிறது. இந்த வளாகத்தில் ஒரு கண்காட்சி கூடம், மாநாட்டு அரங்குகள் மற்றும் கூட்ட அறைகள் உள்ளன.