காங்க்டாக் நகரத்தில் அமைந்துள்ள இந்த சொக்யால் பார்க் எனும் பூங்கா மிவாங் சொக்யால் சென்போ பால்டென் தொந்துப் நம்கியால் என்பவரின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இவர் 12வது டென்சோங் சொக்யால் அல்லது சிக்கிம் மன்னராவார். இவரது காலத்தில் பல சமூக உதவித்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான வசதிகள் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.