எனும் இந்த புனிதக்கோயில் ஒரு பிரமிக்க வைக்கும் அழகுடன் வீற்றிருக்கிறது. சிக்கிம் பகுதியின் தலைநகரில் 1909ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மடாலயமானது காங்க்டாக் நகரத்திற்கு மேலே ஒரு ரம்மியமான மலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து மவுண்ட் கஞ்சன் ஜங்காவின் அழகை நன்கு பார்த்து ரசிக்கலாம்.
புராணிகக்கதைகளின்படி இந்த மடாலயம் வஜ்ராயன புத்த மார்க்கத்தின் நியிங்காமா பிரிவை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. சிக்கிமின் தெற்குப்பகுதியிலுள்ள மேனம் மலையிலிருந்து இங்கு பறந்து வந்ததாக கருதப்படும் லாமா துருப்தோப் கார்போ இங்கு புத்த மார்க்கத்தை பரப்பியவராக சொல்லப்படுகிறார்.
என்ச்சே மடாலயம் எனும் இந்த பெயரான தனிமையான மடம் எனும் பொருளை உணர்த்துகிறது. மற்றொரு புராணக்கதையானது இந்த இடம் இங்குள்ள காங்சென்ட்ஜோங்கா மற்றும் யாப்தீன் போன்ற காவல் தெய்வங்களால் பாதுகாக்கப்படுவதாக கூறுகிறது.
இப்படி ஆன்மீக புராணக்கதைகளை தனது பின்னணியில் கொண்டுள்ள இந்த தெய்வீக மடாலயம் காங்க்டோக் உள்ளூர் மக்களாலும் யாத்ரீகர்களாலும் முக்கிய புனித ஸ்தலமாக மதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இங்குள்ள கொம்பாவில் உறையும் தெய்வங்களுக்கு பக்தர்கள் நினைத்ததை அளிக்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
வெகு நுணுக்கமான அலங்கார அம்சங்களை கொண்டுள்ள இந்த கொம்பாவில் பல தெய்வங்களின் உருவங்களை காணலாம். இதில் முக்கிய தெய்வங்களாக லோகி ஷாரியா, புத்தா மற்றும் குரு பத்மசாம்பவா ஆகியோர் வணங்கப்படுகின்றனர்.
வருடாந்திர சடங்குகளின்போது பயன்படுத்துவதற்கான பலவித முகமூடிகள் மற்றும் ஒரு நூலகம் ஆகியவற்றை இந்த கொம்பா கொண்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, சிக்கிம் பகுதியில் 2006ம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தின்போது இந்த மடாலயம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சில முக்கியமான திருவிழாக்களும் இந்த மடாலயத்தில் கொண்டாடப்படுகின்றன. தேதோர் சம் அல்லது சம் நடன திருவிழா, சிங்கே சாம் மற்றும் பாங் லாப்சால் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.