நேரு பொட்டானிக்கல் கார்டன் எனும் இந்த தோட்டப்பூங்கா ரும்தேக் மடாலயத்துக்கு சற்று முன்னதாக ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. அரிய வகை ஆர்க்கிட் செடிகள் நிரம்பியுள்ள இந்த தோட்டத்தில் பல்வேறு இதர தாவரங்களும் மலர்ச்செடிகளும் வளர்க்கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கும் இதன் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையை ரசித்தபடி நடப்பதற்கான நடைபாதை ஒன்றும் இந்த தோட்டப்பூங்காவினுள் உள்ளது.