ஸரம்ஸா கார்டன் எனும் இந்த அழகிய பூந்தோட்டம் காங்க்டாக் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. வனத்துறையால் பராமரிக்கப்படும் இந்த தோட்டம் பிக்னிக் சுற்றுலா மேற்கொண்டு ஓய்வாக பொழுதை போக்குவதற்கு மிகவும் ஏற்றது.
2008ம் ஆண்டு சர்வதேச மலர் கண்காட்சி விழா இந்த தோட்டத்தில் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு இசை நீரூற்று மற்றும் நீச்சல் குளம் ஆகியனவும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
500 பேர் அமரக்கூடிய அளவில் ஒரு விழாக்கூடமும் இந்த தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு இந்த கூடம் பயன்படுத்தப்படுகிறது.