கஞ்சம் மாவட்டத் தலைநகரமாக சாத்ராபூரில் இருந்து 6 கிமீ தொலைவில் ஆர்;யபள்ளி கடற்கரை அமைந்துள்ளது. உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தனது மயக்கும் பருவநிலையால் கட்டிப்போடும் வல்லமை பெற்ற இடமாக ஆர்யபள்ளி கடற்கரை உள்ளது.
இந்த கடற்கரையில் அடர்த்தியாக நின்று கொண்டிருக்கும் சவுக்கு மரங்களும் அற்புதமான காட்சிகளை கொடுக்கவல்லதாக இருக்கும். சூரிய வெளிச்சம் பட்டு தங்க பழுப்பு நிறத்தில் மின்னும் கடற்கரையும் இந்த கடற்கரையின் அழகை அதிகரிக்கும் வகையில் உள்ளது.
மணல் நிரம்பிய கடற்கரையும், நீல வண்ண ஆழ்கடலும், மன அழுத்தத்தில் இருந்து விலகி தங்களை புத்துணர்ச்சி அடைய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அமைதியாக ஓய்வெடுக்கும் சிறந்த இடமாக இது உள்ளது.
சூரியக் குளியல் மற்றும் கடல் நீரில் சறுக்கி விளையாடுதல் ஆகியவை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பொதுவான பொழுதுபோக்குகளாகும். இந்த கடற்கரையில் இருந்தவாறு, பகல் பொழுது முடிந்து இரவு வேளை வரும் நேரத்தை நிலவொளியில் காண்பது சுற்றுலாப் பயணிகளின் வாழ்நாளில் சிறந்த காட்சியாக இருக்கும்.
ஆர்யபள்ளி வருபவர்சள் மணல் தனிமங்கள் திட்டத்தையும் காண வேண்டியது அவசியம். ஆர்யபள்ளிக்கு வர மிகவும் ஏற்ற பருவமாக அக்டோபர் முதல் மார்ச் மாதங்கள் உள்ளன.