ஓடிசா மாநிலத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றான பால குமாரி கோயில் கண்டிப்பாக அனைவரும் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த கோயில் அம்மனின் தரிசனம் பெறுவதற்கு நீங்கள் 1240 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.
மேலும் இந்த அம்மன் திருமணமாகாத குமரி என்றும், வேண்டும் வரங்களை கொடுக்கவல்ல சக்திகளை உடையவள் என்றும் பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இங்கு நவராத்திரியின் போது நடத்தப்படும் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.