கஞ்சம் மாவட்டத்தின் சாத்ராபூரில் இருந்து 13 கிமீ தொலைவில் ஹியுமா கன்டியகடா அமைந்துள்ளது. சர்வதேச புகழ் பெற்ற கடற்கரைகளில் கிடைக்கும் உணர்வை தரவல்லதாக இந்த கடற்கரை உள்ளது.
சாகசத்தை விரும்புபவர்கள் இந்த கடற்கரையில் சறுக்கி விளையாடலாம். அடங்காத அலைகள் சூரியனை முத்தமிட உயர்வதும், வீழ்வதும் இந்த கடற்கரையில் கண்டு களிக்க வேண்டிய காட்சியாகும்.
இந்த கடற்கரைக்கு அருகிலேயே ருஷிகுல்யா நதி கடலுடன் சங்கமம் ஆகும் இடமும் உள்ளது. கன்டியகடாவில் இருந்து 8 கிமீ தொலைவில் ஹியுமா கன்டியகடா அமைந்துள்ளது.
இவ்விடத்தில் கபிலேஸ்வர் கோவில், லங்கேஸ்வர் கோவில் ஆகியவை உள்ளதால் இந்த இடத்திற்கு புனிதப் பயணமாகவும் வரலாம். பார்வையாளர்களை இயற்கையை இரசித்திருக்க வைத்திருக்கும் ஹியுமா கன்டியகடாவில் கடவுள்கள் நிறைந்த மதத் தலங்களுக்கும் பஞ்சமில்லை எனலாம்.