கஞ்சம் மாவட்டத்தின் பெஹ்ராம்பூரில் இருந்து 45 கிமீ தொலைவில் உஜ்ஜாலேஸ்வர் அமைந்துள்ளது. ஒரு மலை மீது இருக்கும் குகையில் இயற்கையாக உருவான கோவிலாக உஜ்ஜாலேஸ்வர் கோவில் உள்ளது.
மலையில் உள்ள பாறைகள் படிக்கட்டுகள் போன்று செதுக்கப்பட்டு இந்த கோவிலுக்கு பாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் பின்பகுதியில் பெரிய பாறை ஒன்று, இந்த கடவுளுக்கு தேவையான நிழலை கொடுத்தவாறு நின்று கொண்டுள்ளது.
இந்த பாறையிலும் கூட படிகள் போன்ற அமைப்புகள் செதுக்கப்பட்டு, பக்தர்கள் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளை மேலே ஏறி காண வகை செய்யப்பட்டுள்ளது.
அமைதியான அமைவிடத்தில் இருக்கும் இந்த தலம் பக்தர்களுக்கு புத்துணர்வையும், ஆறுதலையும் தரும் இடமாக இருக்கும். இந்த இடத்தை அடையும் முன்னர் அருகிலுள்ள கோடஹடா அணைக்கட்டை தாண்டி செல்ல வேண்டியிருக்கும்.
கோடஹடா அணைக்கட்டில் விஜயநகர கோட்டை மற்றும் அதன் கோவில் ஒன்று ஆகியவை மூழ்கியுள்ளன. தாகத்தை தணிப்பதற்காக இந்த நீர்;த்தேக்கப் பகுதிக்கு வரும் யானைகள், பைத்தான்கள் (பெரிய வகை பாம்புகள்) மற்றும் முதலைகளால் மட்டுமே இ;ந்த இடத்தின் அமைதி கெடும். இந்த அணைக்கட்டின் மேலே இருந்தவாறு, இந்த விலங்கினங்களையும், அற்புதமான வனப்பகுதியையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.