கணபதிபுலே ஸ்தலத்துக்கு அருகாமையிலேயே இந்த வேல்நேஷ்வர் கிராமம் அமைந்துள்ளது. ஷாஸ்த்ரி ஆற்றுக்கு வடக்குப்பகுதியில் உள்ள இந்த அழகான சிறிய கிராமம் மிக அற்புதமான கடற்கரையை கொண்டுள்ளது.தொடுவானம் வரை நீளும் நீர்ப்பரப்பும் கரையை ஒட்டியே வரிசையாக காட்சியளிக்கும் தென்னை மரங்களும் இங்கு கண்கவரும் இயற்கை எழிலாக காட்சியளிக்கின்றன.
இந்த ஸ்தலத்தை மஹா சிவராத்திரி பண்டிகையின் போது விஜயம் செய்வது சிறந்தது. இங்குள்ள சிவன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு கோலாகலமாக இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.