கயா மையத்தில் அமைந்துள்ள ஜமா மஸ்ஜித், பீகாரின் மிகப்பெரிய மசூதி என்ற பெருமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது முஸாபர்புர் அரச குடும்பத்தால் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
மேலும் இங்கு ஷ்ஹபினா மற்றும் டாப்லிக் கொண்டாட்டங்கள் மிகப் பிரபலமானது. ஷ்ஹபினா திருவிழாவானது ரமலான் மாதத்தின் 27 ம் இரவிலும், டாப்லிக் திருவிழா இஸ்லாத்தை பரப்புவது சம்பந்தமாக வந்த செய்தியை குறிக்கும் விதமாகவும் வெவ்வேறு காரணங்களுக்காக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இந்த மசூதியானது மிகப் பழமையானதாக இருந்தாலும், இஸ்லாமை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை பாதுகாத்து கடவுளின் அன்பை அனைவருக்கும் வழங்குகின்றது. இங்குள்ள ஷாய் கேட் மினார்ட் இந்த அழகிய மசூதிக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.
முஸ்லீம் விழாக்களில் இங்கு கொண்டாடப்படும் பொழுது பெரும் திரளான மக்கள் இங்கு கூடி அல்லாவின் எல்லையில்லா கருணையை பெருகின்றார்கள்.
ஹஸ்ரத் மக்தூம் சையத் ஷா கோவில் இஸ்லாத்தை பின்பற்றுவர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளதால், பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இங்கு வருகை புரிந்து தங்களுடைய பாவத்தில் இருந்து விடுதலை பெற பிரார்த்திக்கின்றனர்