நகரின் மற்றொரு அழகான மற்றும் குறிப்பிடத்தக்க அம்சம் ப்ஹல்கு நதியை ஒட்டி அமைந்துள்ள விஷ்ணு பாத கோவில் ஆகும். இங்கு கருங்கல்லில் செதுக்கப்பட்ட தர்மஸிலா என குறிப்பிடபடும் விஷ்ணூ பாதம் உள்ளது.
இந்தக் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள பிரஹ்மஜுனி பார்வையாளர்களுக்கு ஒரு உன்னத அனுபவத்தை வழங்குகின்றது. இந்த மலையை கல் படிகளை பயன்படுத்தி ஏறி இந்தக் கோவிலின் அழகிய காட்சிகளை கண்டு மகிழலாம்.
விஷ்ணு பாதம் சுமார் 40 செ.மீ நீளமுடையது மற்றும் அது வெள்ளிக் கவசத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த கோவில் மேற்கூரையானது எட்டு அழகிய மற்றும் கவர்ச்சிகரமாக செதுக்கப்பட்ட தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.
கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலானது கிழக்கு நோக்கி எண் கோண வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் இறவாத ஆலமரமான அக்ஷயபாத் ஒன்று உள்ளது. அந்த ஆலமரத்தில் அடியில் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு நடத்தப்படுகின்றது.