வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான அஜ்ராரா, உத்தரபிரதேசத்தின் கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கடந்து ஓடும் காளிநாடு என்ற சிறிய நதியின் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது.
ஊராட்சி தலைநகரான கார்கோடாவில் இருந்து 7.5கிமீ தொலைவில் உள்ளது அஜ்ராரா. அஜைபால் என்ற யோகி இவ்வூரில் ஒரு கோவிலை கட்டி அஜைபரா என்று பெயரிட்டார். அவரின் நினைவாக இவ்வூர் இப்பெயரைப் பெற்றது.
தபலா வாசிப்பில் க்ரானா என்ற புதிய வடிவத்தை உருவாக்கிய தபலா கலைஞர்களால் இவ்வூர் புகழ்பெற்றுள்ளது. தபலா வாசிப்பில் புகுத்தப்பட்ட அந்த முறை இவ்வூரின் பெயரிலேயே அஜ்ராரா கரான என்றழைக்கப்படுகிறது.
மீரூ கான் மற்றும் கல்லோ கான் ஆகிய இரு சகோதரர்களால் அஜ்ராரா க்ரானா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி க்ரானா கலைஞரான உஸ்தாத் சிதாப் கானிடம் அடைக்கலமாகி இக்கலையைக் கற்றார்கள்.
பின் இக்கலையில் மிகவும் தேர்ந்த இவர்கள் உருவாக்கிய அஜ்ராரா க்ரானா இன்று இந்தியாவின் மிக முக்கியமான ஆறு தபலா கலைகளில் ஒன்றாக திகழ்கிறது.