உத்தரப் பிரதேசத்தின் கெளதம புத்த நகருக்கு அருகில் அமைந்துள்ள தாத்ரி கிராமம். 1857ன் முதல் சுதத்திரப் போரில் இவ்வூர் மகத்தான பங்கு பெற்றது.
குர்ஜார் இனத்தவரான அதன் ஆட்சியாளர் ராஜா உம்ரோ சிங் மற்றும் சிலரும் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்கள். தேசிய வெப்ப சக்தி கழகம் இங்கு ஒரு சக்தி உருவாக்க ஆலையை நிறுவியுள்ளது.