போஜ்பூரில் இருந்து 2கிமீ தூரத்தில், மோடிநகர் ஊராட்சியைச் சேர்ந்த சிறிய கிராமமான ஃபரித்நகர் கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெகுமாபாத்-ஹாபூர் சாலையில் மாவட்ட தலைநகரில் இருந்து 30கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஃபரித்நகர்.
அக்பரின் அரசவை அதிகாரியான ஃபரித்-உத்-தீன் கான் என்பவரின் பெயரில் இருந்து இவ்வூர் இப்பெயர் பெற்றது. பில்குவா மற்றும் பெக்மபாதை உள்ளடக்கிய 17கிராமங்களையும் சேர்த்து அவரின் விசுவாசத்திற்கு பரிசாக அக்பர் அளித்தார்.
கோட்டைக்காவல் நகராக விளங்கிய ஃபரீத்நகர், பிரதானமாக பலோச் வீரர்களை உள்ளடக்கிய முகாலய ராணுவ தளமாக இருந்தது. மேலும் அக்பர் மற்றும் ஜஹாங்கீர் காலத்தின் காசு உற்பத்தியும் இங்கு நடந்தது.
பலோச்சன் வீரர்களுக்கு புகழிடமாக திகழ்ந்த கார்ஹி பலோச்சன் குடியிருப்புப் பகுதி இங்கு இருந்தது. அதன் வாயில் பெரிய இரும்புக் கதவால் காக்கப்பட்டது. கார்ஹி பலோச்சனுக்கு அருகில் ஜம்மா மஸ்ஜித் என்ற அழகிய மசூதியும் உண்டு. அக்பர் காலத்தில் ஃபரித்நகர் செழித்து வளர்ந்தது.