ஹாபூர் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க இவ்வூர் கஜியாபாத் மாவட்டத்தின் மிகப்பெரிய ஊராட்சியாகும். மாவட்ட தலைநகரில் இருந்து 34கிமீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 60கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூர் நாட்டின் தலைநகர் பகுதியில் ஒன்றாகும்.
புலாந்த்ஷார் மற்றும் மீரத் நகர தலைவரான ஹர்தத்தா என்பவரால் கிபி 983யில் இவ்வூர் உருவாக்கப்பட்டு அவர் பெயராலேயே அழைக்கப்பட்டதாக நம்புகிறார்கள். மேலும் ஹபார் என்றால் தோட்டம் என்ற பொருளில் இவ்வூர் ஹாபூர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
பப்படம் எனப்படும் சிறிய வட்ட வடிவிலான, உப்பு காரம் தூவப்பட்ட தின்பண்டங்களுக்காக இவ்வூர் புகழ்பெற்றது. பழங்காலங்களில் டெல்லி வாயில், மீரத் வாயில், கர்முக்தேஸ்வரர் வாயில், கோதி மற்றும் சிகந்த்ரா வாயில் ஆகிய ஐந்து வாயில்களின் மூல இவ்வூரை அடையலாம்.
1670ல் முகாலய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட ஜம்மா மஸ்ஜித் என்ற மசூதி இங்கு புகழ்பெற்று விளங்குகிறது. சந்தி கோவில், சப்லி ஷிவா கோவில், துதேஷ்வர் நாத் கோவில் ஆகிய இந்து கோவில்களும் இங்கு புகழ்பெற்று விளங்குகின்றன.