உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சேத் குஜ்ஜார் மால் மோடி என்பவரின் வியாபாரக் குடும்பத்தின் நினைவாக இவ்வூர் மோடிநகர் எனப் பெயர் பெற்றது. கஜியாபாதில் இருந்து வடகிழக்கு நோக்கி 25கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் டெல்லி-முசூரி தேசிய நெடுஞ்சாலையில்(NH-58) அமைந்துள்ளது.
ஒப்பீட்டின் அடிப்படையில் புதிய நகரமாக கருதப்படும் இவ்வூர் 1975ல் கஜியாபாத் மாவட்டமாக அறிவிக்கப்பட்டபோது ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது.
19ம் நூற்றாண்டில் ராணி பாலா பாய் சிந்தியா என்பவரால் கட்டப்பட்ட கோவில் ஒன்று இங்குள்ளது. 1933ல் கட்டப்பட்ட சர்க்கரை ஆலையையும் சேர்த்து மோடி குடும்பத்தினரால் நிறுவப்பட்ட பல தொழிற்சாலைகள் இவ்வூருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உள்ளன.
571ஏக்கர் பரப்பளவில் உள்ள இவ்வூர் நவாப் ஜாஃபர் அலி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட சரித்திர பின்புலம் வாய்ந்த பெகுமாபாதின் ஒரு பகுதியாக இருந்தது. அவருக்குப் பின் அவரது மனைவி இவ்வூருக்கு பேகும்பாத் எனப் பெயரிட்டார்.
மோடிகளால் 15.2ஏக்கர் பரப்பளவில் 58வது தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட புகழ்பெற்ற கோவில் ஒன்றும் இங்குள்ளது. லட்சுமி நாராயணன் மோடி கோவில் என்றழைக்கப்படும் அக்கோவில் உள்ளூர்வாசிகளால் மோடி கோவில் என்றழைக்கப்படுகிறது.